தேசிய மின்னணு ஆளுமைத் திட்டம் அனைத்து அரசு சேவைகளும் சாதாரண மக்களுக்கு அவர்களுடைய இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பொதுச் சேவை மையங்களின் மூலம் கிடைக்கவும் அந்தச் சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் திறம்பட, வெளிப்படையாக, நம்பகத்தன்மையுடன் வழங்குவதற்கு தொலைநோக்குப் பார்வையுடன் தேசிய மின்னணு ஆளுமைத் திட்டத்திற்கு [National e-Governance Plan (NeGP)] 2006-ம் ஆண்டு மே மாதம் அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அடிப்படை மின்னணு உள்கட்டமைப்பில் மாநிலத் தரவு மையங்கள் மாநில அளவிலான கட்டமைப்புகள் மாநிலச் சேவை வழங்கல், பொதுச் சேவை மையங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பாஸ்போர்ட், நில ஆவண மேலாண்மை, மின்னணு அலுவலகம், பொது விநியோகத் திட்டத்தை கணினி மயமாக்கல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 2015 ஜூலை மாதம் மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய மின்னணு ஆளுமைத் திட்டம் இணைக்கப்பட்டது. மின்னணு உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், அரசு சேவைகளை மின்னணு முறையில் வழங்குதல், மின்னணு அறிவுசார் மற்றும் வேலைவாய்ப்பு மூலம் குடிமக்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை ஒன்றோடொன்று தொடர்புடைய இலக்குகளை ஊக்குவிக்கிறது. ஆதார் மூலம் 144 கோடிக்கும் மேலான ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதாருடன் இணைக்கப்பட்ட நேரடிப் பயன் பரிமாற்றம் மூலம் 56 அமைச்சகங்களின் 318 திட்டங்களின் பணப்பலன்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அளிக்கப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290995®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்